ஊழியர் நலன் என்பது வெற்று கோஷமல்ல. உயிர் மூச்சு

Monday, December 19, 2016

கோட்ட ஈராண்டு மாநாடு

NFPE                                                   NFPE            
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், மூன்றாம் பிரிவு,
மயிலாடுதுறை கோட்ட கிளை , மயிலாடுதுறை – 609 001.


செய்தி தொடர்பு :                                                                                         நாள்: 19.12.2016

        உட்பகை நீக்கி....... புறப்பகை நீக்குக..........      

கோட்ட ஈராண்டு மாநாடு
      நமது மயிலாடுதுறை கோட்ட கிளையின் 23-வது ஈராண்டு மாநாடு 27.11.2016 அன்று மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் மிக சீரும் சிறப்புமாக நடைபெற்றது.  மாநாட்டு முதல் நிகழ்ச்சியாக நமது மாநில செயலர் தோழர்.  JR அவர்கள் நமது சங்க கொடியை ஏற்றி வைக்க விண்ணதிர முழக்கங்கள் ஒலிக்க துவங்கப்பட்டது.  மாநாடு முறையாக துவங்கப்பட்டதாக அஞ்சல் மூன்றின் கோட்ட தலைவர் தோழர். P. இரவிச்சந்திரன் அறிவிக்க – மாநாட்டு அறிக்கையை கோட்ட செயலர் தோழர். K. துரை அவர்களும், கோட்ட வரவு செலவுகளை கோட்ட பொருளர் தோழர். K. வெங்கடேஷ் அவர்களும் தாக்கல் செய்தனர்.

      பின்னர் நடைபெற்ற கோட்ட சங்க நிர்வாகிகள் தேர்வுக்கு -  கோட்ட தலைவர், கோட்ட செயலர் பதவிக்கு மட்டும் தேர்தல் நடைபெற மற்ற அனைத்து நிர்வாகிகளும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  மாநாட்டில் நமது மாநில சங்கத்தின் உதவி தலைவரும்,  குடந்தை கோட்ட அஞ்சல் மூன்றின் செயலருமாகிய  தோழர் R. பெருமாள், தஞ்சை கோட்ட அஞ்சல் மூன்றின் செயலர் தோழர் S. செல்வகுமார்,  சீர்காழி கிளை அஞ்சல் மூன்றின் செயலர் தோழர். T. கோவிந்தராஜன்,  சீர்காழி கிளை அஞ்சல் மூன்றின் முன்னால் செயலர், முன்னால் மாநில அமைப்பு செயலருமாகிய  தோழர். N. நடராஜன், மயிலாடுதுறை கோட்ட அஞ்சல் நான்கின் தலைவர் தோழர். M.சாமிநாதன், செயலர் தோழர். R. அமிர்தலிங்கம், பொருளர் தோழர். K. வேல்முருகன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

      நமது மாநில செயலர் தோழர். JR அவர்கள் Cadre Restructuring, 7-வது ஊதிய குழுவின் அமுலாக்கம் மற்றும் இன்றைய சூழல் குறித்து விளக்கமாக உரையாற்ற மாநாட்டு நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுற்றது.


கோட்ட சங்க நிர்வாகிகள்

தலைவர்                              : Com. G. ஊமதுரை,  SPM, AKKUR SO

உதவி தலைவர்:        : Com. N. இளங்கோவன், DPM, MYL HO
                        : Com. M. மனோகரன், SPM, PERALAM SO
                        : Com. V. நாராயணன், APM, MYL HO
                        : Com. B. வசந்தி, PA, MYL HO

செயலர்                 : Com. V. மோகன்குமார், OA, O/o SPOs, MYL

உதவி செயலர்          : Com. M. சேகர், PA, MYL HO
                        : Com. G. பாலமுருகன், SPM, PUNTHOTTAM SO
                        : Com. B. சங்கர், TRR, MYL HO
                        : Com. S. தியாகராஜன், SPM, KILAIYUR SO

பொருளர்                : Com. S. விமல் நாயக், PA, MYL HO

உதவி பொருளர்             : Com. M. வெங்கட்ராமன், SA, MYL HO

அமைப்பு செயலர்        : Com. S. சரவணச்செல்வன், OA, O/o, SPOs, MYL
                         : Com. R. ராஜசேகரன், SPM, MANNAMPANDAL SO
                         : Com. K. துரை, SPM, ATPURAM SO
                   
தணிக்கையாளர்          : Com. V. அம்பலவாணன், SPM, MYL CUTCHERRY SO 
        

         செயற்குழு உறுப்பினர்கள்

Com. B.பாஸ்கரன், SPM, Koranad,                             Com. R.மீனாட்சி, PA, MYL HO
Com. P.திருவேங்கடம், PA, MYL RS,                        Com. K. லதா, PA, MYL HO
Com. M.சியாமலாமணி, PA, MYL HO,                      Com. S.ஸ்ரீபிரியா, OA, O/o SPOs,
Com. R.அழகுமதிசெல்வம், PA, MYL HO,                Com. S.ஆனந்தராஜா, DSM, O/o SPOs,
Com. P.கரிகாலன், SPM, Nalladai,                              Com. M.கணேசன், OA, O/o SPOs,
Com. C.மணிகண்டன், SPM, Nidur,                            Com. J.லோகநாயகி, PA, Porayar,
Com. T.ஜோதி, PA, Koranad,                                       Com. T.அசோக், PA, Akkur, 
Com. S.துரைராஜ், PA Sembanarkoil,                           Com. T.ஐய்யப்பன், PA, Sembanarkoil. 

அகில இந்திய செய்திகள்

      கடந்த 15.12.2016 அன்று மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனம் சார்பில் பாராளுமன்றம் நோக்கிய மாபெரும் பேரணி நடைபெற்றது. HRA, TRA மற்றும் மற்ற அலவன்சுகளை உடனே வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.

மாநில சங்கத்தின் பார்வைக்கு

      தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு 2017-ம் ஆண்டிற்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. நமது மாநில செயலர் தோழர் JR அவர்கள், Chief PMG அவர்களிடம் கோரிக்கை வைத்து பொங்கல் அன்று விடுமுறை பெற்று தர வேண்டுகிறோம்.

அன்பான வேண்டுகோள்

      மாநில மற்றும் அகில இந்திய சங்கத்திற்கு நமது கோட்ட சங்கத்தின் பகுதி பணம் கட்ட வேண்டும். நமது நிதி நிலைமை உங்களின் கவனத்திற்கு தெரிந்ததுதான். நிதி நிலைமையை சீராக்க தங்களால் இயன்ற நிதி உதவியைப் பெருமளவில் நமது கோட்ட பொருளர் தோழர் S. விமல் நாயக் அவர்களிடம் கொடுத்து உதவுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.

நாள் காட்டி

      2017-ம் ஆண்டிற்கான நாட்காட்டி நமது சங்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.  தங்களை நேரடியாக சந்திக்க வருகின்றோம்.

வாழ்த்துக்கள்

      நமது மூத்த தோழர் P.உத்திரமூர்த்தி அவர்களின் புதல்வி திருமணம் 07.12.2016 அன்று கொல்லுமாங்குடியில்   நடைபெற்றது.  மணமக்களை வாழ்க வளமுடன் என கோட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.
     
      மயிலாடுதுறை அஞ்சல் – ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் சங்கத்தின் 35-வது ஆண்டு விழா மற்றும்  ஓய்வூதியர் தின விழா 18.12.2016 அன்று மயிலாடுதுறையில்  சிறப்பாக நடைபெற்றது. ஓய்வூதியர் சங்கத்தின் பணி சிறக்க நமது கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றோம்.
     

      அனைவருக்கும் எமது கிருத்துமஸ், ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

“ஊழியர் நலன் என்பது – வெற்று கோஷமல்ல – உயிர் மூச்சு”  
             
தோழமையுடன்.........

  G. ஊமதுரை                 V. மோகன்குமார்                S. விமல் நாயக்
கோட்ட தலைவர்               கோட்ட செயலர்               கோட்ட  பொருளர் 

No comments:

Post a Comment