நமது தொழிற்ச்சங்க உறுபினரும் பேரளம் துணை அஞ்சலக எழுத்தருமாகிய தோழர் ராஜேஷ் அவர்களின் திருமண விழா 03.07.17 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. மணமக்களுக்கு நமது சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்
Monday, July 10, 2017
Wednesday, June 7, 2017
வாழ்த்துக்கள்....
நமது அஞ்சல் மூன்று கோட்ட சங்கத்தின் அமைப்பு செயலரான தோழர் S. சரவனச்செல்வன் அவர்களின் புதுமனை புகுவிழா 04.06.2017 அன்று மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது..... தோழர் சரவனசெல்வன் மற்றும் அவர்களின் குடும்பத்தினற்கு நமது சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்
Wednesday, May 31, 2017
திருமண வரவேற்பு விழா
ஆக்கூர் துணை அஞ்சலகத்தில் தபால்காரராக பணியாற்றும் நமது P4 சங்க தோழர் K. ராஜமுருகன் அவர்களின் திருமண வரவேற்பு விழா மிகச் சிறப்பாக ஆக்கூரில் நடைபெற்றது.... மணமக்களுக்கு நமது அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துகொள்கிறோம்.....
Monday, May 22, 2017
சீர்காழி கிளை அஞ்சல் நான்கின் கோட்ட மாநாடு
நமது கோட்டத்தில் சீர்காழி கிளை அஞ்சல் நான்கின் கோட்ட மாநாடு சீரும் சிறப்புமாக நேற்று (21.05.2017) மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் அஞ்சல் நான்கின் தமிழ் மாநில செயலர் மரியாதைக்குரிய தோழர் G. கண்ணன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். மாநாட்டில் சீர்காழி கிளைத் தலைவராக தோழர் மனோகரன் அவர்களும் செயலராக தோழர் ராஜேந்திரன் அவர்களும் பொருளராக தோழர் சரவணக்குமார் அவர்களும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அனைத்துப் புதிய பொறுப்பாளர்களுக்கும் மயிலாடுதுறை அஞ்சல் மூன்றின் சார்பாக வீர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...
Thursday, May 11, 2017
Monday, May 1, 2017
மே தின கொடியேற்று விழா..... உழைக்கின்றவர்க்கே உலகம் சொந்தம்.... வாழாமல் உழைத்து உழைக்காமல் வாழ்பவர்க்கு உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளியே உலகம் உனக்கே சொந்தம்...
மே தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் சங்க கொடியேற்றுவிழா சிறப்பாக நடைப்பெற்றது.
விழாவிற்கு அஞ்சல் மூன்றின் கோட்ட தலைவர் தோழர் G.ஊமதுரை அவர்கள் தலைமை தாங்கினார்.
சங்ககொடியை கோட்ட உதவி தலைவர் தோழர் N. இலங்கோவன் அவர்கள் ஏற்றிவைத்தார். நிகழ்ச்சியில் நமது சங்க்கத்தின் முன்னால் மாநில உதவி செயலர் மதிப்பிற்குரிய மூத்தத் தோழர் மருதுசாமி அவர்கள் சிறப்புரை வழங்கினார்.
Tuesday, April 25, 2017
Commission for Sovereign Gold Bond
A letter has been sent to our beloved and respected com. R.N. Parashar regarding payment of commission for SGB.......
சனிக்கிழமை விடுமுறை வேண்டி....
பெரும்பாலான மத்திய அரசு துறைகளுக்கு வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. அஞ்சல் துறையிலும் Administration பகுதியில் உள்ளவர்களுக்கும் வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இன்று வங்கிகளும் 2,4 சனிக்கிழமையை விடுமுறை நாளாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. இன்சூரன்ஸ் துறையான LICம் இவ்வாறே உள்ளது. ஆனால் அஞ்சல் துறையின் operative பகுதியில் வேலை செய்பவர்களுக்கு வாரம் ஆறு நாட்கள் வேலை நாட்கள். அப்படிப் பார்த்தால் வருடம் 365 நாட்களில் தோராயமாக 17 விடுமுறை நாட்கள், 52 ஞாயிறு விடுமுறை (17ல் சில ஞாயிறிலும் வரும்) சேர்த்து 69 நாட்கள் போக 296 நாட்கள் வேலை நாட்களாக உள்ளது. மற்றவர்களுக்கு 244 நாட்களே வேலை நாட்கள். 52 நாட்கள் அதிகம் வேலை செய்யும் நமக்கு அதற்குரிய ஈட்டிய விடுப்போ அல்லது சனிக்கிழமை விடுமுறையோ வழங்கப்படுமானால் அது நம் அனைவருக்கும் அளவில்லா மகிழ்ச்சி செய்தியாக அமையும். இதைக் கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என நம் NFPE P3 அகில இந்தியப் பொதுச் செயலாளார் நம் துறை secretaryக்கு கடிதம் எழுதியுள்ளதன் செய்தி பின்வருமாறு:
Ref: PF/GENL/NFPE Dated – 11.02.2016
To
The Secretary
Department of Posts
Dak Bhawan, New Delhi – 110001
Sub: - Provision of five days week – request consideration.
Madam,
The Postal operative staff are in great pressure and heavy strain in the work after the implementation of ongoing CBS, CIS etc. Two days rest in a week will motivate them better work performance.
Already, five day weak is in vogue in respect of Postal administrative offices and Postal accounts. Only the operative offices are kept open for six days in a week.
Recently, the bank employees have been observed five day weeks in the second and fourth week of the month. This is being introduced in the insurance public sector companies like LIC.
It is therefore requested to kindly consider to observe five days week in the Postal operative officers.
Soliciting favourable response
Yours faithfully,
(R. N. Parashar)
Secretary General
ஏறக்குறைய ஒருவருடத்திற்கு மேலாகியும் அது குறித்தான மேற்கொண்ட செய்தி எதுவும் கிடைக்கப்பெறாமல் இருக்கிறது. அது குறித்து மேற்கொண்டு முயற்சிகள் எடுத்து
வெற்றிப் பெற்று ஒரு மகத்தான சாதனையை நமது சங்கம் பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வி. மோகன் குமார் ,
கோட்ட செயலர்,
அஞ்சல் மூன்று ( NFPE)
மயிலாடுதுறை கோட்டம்
அவசரப் பொதுக்குழு....
அனைத்துப் பகுதி தோழர்கள் மற்றும் தோழியர்கள் அவசியம் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்....
நாள்: 29.04.2017
இடம்: மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம்
நேரம்: மாலை 6 மணி
Monday, April 10, 2017
நமது கோட்ட அஞ்சல் மூன்றின் உதவி செயலர் தோழர் பாலமுருகன் அவர்களின் தங்கை திருமண விழா 09.04.2017 அன்று திருவாரூரில் சிறப்பாக நடைப்பெற்றது.
விழாவில் நமது கோட்ட சங்கத்தின் சார்பாக தலைவர் தோழர் ஊமதுரை, செயற்குழு உறுப்பினர் தோழர் ஆனந்தராஜா மற்றும் தோழர் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Thursday, March 16, 2017
ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்
இன்று (16.03.2017) நாடு தழுவிய அளவிளான ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டதில் மயிலாடுதுறை கோட்டத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைப்ப்ற்றது. இதில் NFPE, FNPO, SC/ST FEDARATION & PENSIONERS ASSOCIATION OF POSTAL & RMS, STATE GOVT., PENSIONERS ASSOCIATIINS போன்ற அனைது சங்க பொறுப்பாளார்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை கோட்டதில் 98% ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Tuesday, March 14, 2017
Wednesday, March 8, 2017
Tuesday, March 7, 2017
Tuesday, February 21, 2017
Monday, February 20, 2017
NCA பேரவை - செயற்க்குழு......
மதுரை கோட்டத்தில் நமது NCA பேரவையின் செயற்க்குழு கூட்டம் மிகச்சிறப்பான முறையில் 19/02/2017 அன்று தல்லாகுளம் தலைமை அஞ்சலகத்தில் நடைப்பெற்றது..... இந்த கூட்டத்தில் நமது கோட்டத்தின் சார்பில் தலைவர், செயலர் மற்றும் சீர்காழி கிளையின் செயலர் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்..,
Wednesday, February 15, 2017
Congratulations........
Our Tamilnadu circle Basketball team got second position in All India Basketball Tournament held at PTC, VADODARA.....
Sunday, January 29, 2017
வாழ்த்துகள்....
திருச்சியில் நடைபெற்ற மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் நமது கோட்டத்தின் சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைத்துத் தோழர்கள் மற்றும் தோழியர்களுக்கு கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்...,
Thursday, January 12, 2017
பொங்கல் திருவிழா....
மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் தலைமை அஞ்சல் அதிகாரி தலைமையில் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கோட்ட கண்காணிப்பாளர் கலந்து கொண்டு சிறப்பித்தார்
அனைவருக்கும் எங்களது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..,
Tuesday, January 10, 2017
வெற்றி! வெற்றி!! வெற்றி!!!
நமது கோரிக்கையை ஏற்று பொங்கல் விடுமுறையைக் கட்டாய விடுமுறையாக மாற்றி மத்திய அரசு அறிவித்துள்ளது. கட்டாய விடுமுறையில் இருந்த Additional Day for Dusseraவானது RH விடுமுறையாக மாற்றப்பட்டுள்ளது.
ஆகவே, நாளை நடைபெற இருந்த பொங்கல் விடுமுறைக்கான ஆர்ப்பாட்டம் இரத்து செய்யப்படுகிறது.
Friday, January 6, 2017
Thursday, January 5, 2017
Strike Postponed to 16th March 2017
Wednesday, January 4, 2017
மாபெறும் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள்,
(P3 - P4 - GDS)
மயிலாடுதுறை கோட்டம், மயிலாடுதுறை – 609 001
தோழமைக்குரியோர்களே, வணக்கம்!
மாபெரும் ஆர்ப்பாட்டம்
இடம்: மயிலாடுதுறை H.O நாள்: 05.01.2017 நேரம்: மாலை 6 மணி
7-வது ஊதியக்குழு அமுல்படுத்திய போது HRA, CCA மற்றும் அடிப்படை ஊதிய மாற்றம், ஊதியக் கணக்கீடு (Fitment Formula) மாற்றம் இவை பற்றி பரிசீலித்து முடிவெடுக்க அமைக்கப்பட்ட கமிட்டிகள் 6 மாத காலம் ஆன பிறகும் எந்தவித முடிவையும் மத்திய அரசுக்கு அளித்திடவில்லை. எனவே 11.07.2016 முதல் நடைபெற இருந்த ஒத்திவைக்கப்பட்ட வேலை நிறுத்தம் எதிர்வரும் 15.02.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தமாக மத்திய அரசு ஊழியர்களால் நடத்தப்படவுள்ளது. அதன் முதல் கட்டமாக 05.01.2017 வியாழக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் மயிலாடுதுறை HO முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அனைத்து பகுதி தோழர்கள் மற்றும் தோழியர்கள் கலந்து கொண்டு, நிர்வாகத்திற்கு ஒட்டுமொத்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் காண்பிப்போம்.
அணிதிரண்டு வாரீர்!ஆர்ப்பரித்து வாரீர்!!
தோழமையுடன்
V. மோகன் குமார் செயலர் P3
R.அமிர்தலிங்கம் செயலர் P4
A. சங்கர் செயலர் GDS (NFPE)
Monday, January 2, 2017
HAPPY NEW YEAR.......
இருக்கும் சந்தோசங்கள் நிலைக்கவும் , இழந்த சந்தோசங்கள் கிடைக்கவும் , செயும் முயற்சிகள் வெற்றி பெறவும் ,
உடலும் உள்ளமும் ஆரோக்யத்துடன் இருக்கவும்...
இப்புத்தாண்டு உங்களுக்கு புத்துணர்வூட்டும் ஆண்டாக அமையவும்...
எங்களின் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.......