அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள்,
(P3 - P4 - GDS)
மயிலாடுதுறை கோட்டம், மயிலாடுதுறை – 609 001
தோழமைக்குரியோர்களே, வணக்கம்!
மாபெரும் ஆர்ப்பாட்டம்
இடம்: மயிலாடுதுறை H.O நாள்: 05.01.2017 நேரம்: மாலை 6 மணி
7-வது ஊதியக்குழு அமுல்படுத்திய போது HRA, CCA மற்றும் அடிப்படை ஊதிய மாற்றம், ஊதியக் கணக்கீடு (Fitment Formula) மாற்றம் இவை பற்றி பரிசீலித்து முடிவெடுக்க அமைக்கப்பட்ட கமிட்டிகள் 6 மாத காலம் ஆன பிறகும் எந்தவித முடிவையும் மத்திய அரசுக்கு அளித்திடவில்லை. எனவே 11.07.2016 முதல் நடைபெற இருந்த ஒத்திவைக்கப்பட்ட வேலை நிறுத்தம் எதிர்வரும் 15.02.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தமாக மத்திய அரசு ஊழியர்களால் நடத்தப்படவுள்ளது. அதன் முதல் கட்டமாக 05.01.2017 வியாழக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் மயிலாடுதுறை HO முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அனைத்து பகுதி தோழர்கள் மற்றும் தோழியர்கள் கலந்து கொண்டு, நிர்வாகத்திற்கு ஒட்டுமொத்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் காண்பிப்போம்.
அணிதிரண்டு வாரீர்!ஆர்ப்பரித்து வாரீர்!!
தோழமையுடன்
V. மோகன் குமார் செயலர் P3
R.அமிர்தலிங்கம் செயலர் P4
A. சங்கர் செயலர் GDS (NFPE)
No comments:
Post a Comment